BUY INDIAN CONSTITUTIONAL HISTORY DHARMARAJ TAMIL| இந்திய அரசியலமைப்பு வரலாறு தர்மராஜ் | 2025 | LATEST EDITION | BEST GUIDE IN TAMIL|
இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இந்தியா, பிரித்தானியாவின் இந்தியா, மன்னராட்சி நடக்கும் மாநிலங்கள் என இரண்டு வகையான பிரேதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் முதலாவது “பிரித்தானியாவின் இந்தியா” என்பதாகும். அது லண்டனில் இயங்கி வந்த இந்திய அலுவலகம் மற்றும் இந்தியாவின் கவர்னரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது. இரண்டாவது “மன்னராட்சி நடக்கும் மாநிலங்கள்” ஆகும்.
இதில் மன்னர்கள் குறிப்பிட்ட பிரதேசங்களில் முடி சூடி நிலவுரிமை செலுத்தி வந்தனர். இதில் அப்பிரதேசங்கள் அவர்களது வாரிசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்யப்பட்டன. மேலும் பிரான்சு மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டணி ஆட்சி நடந்த சில காலனிப் பகுதிகளும் இருந்தன. இந்தியாவில் அப்போது இந்தப் பிரதேசங்களில் அரசியல் ஒருங்கிணைப்பே இந்திய தேசியக் காங்கிரஸின் குறிக்கோளாக இருந்தது, அடுத்த பத்தாண்டுகளுள் இந்திய அரசாங்கத்தின் முக்கிய செயல்பாடாகவும் அதுவே இருந்துவந்தது. பல்வேறு காரணிகளின் வாயிலாக வல்லபாய் பட்டேலும் (Vallabhbhai Patel), வி.பி. மேனனும் இணைந்து கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மன்னராட்சிப் பிரதேசங்களை இந்தியாவுடன் இணைப்பதற்கு அப்பகுதிகளை ஆண்ட ஆட்சியாளர்களை சம்மதிக்க வைத்தனர்.
இந்த இணைப்பில் பாதுகாப்பு கருதி அவர்கள் படிப்படியாக இதனை செயல்படுத்தினர். அந்தப் பகுதிகளில் மத்திய அரசாங்கத்தின் ஆளுமையினை அவர்கள் விரிவுபடுத்தியிருந்தனர். மேலும் 1956 ஆம் ஆண்டு வரை அவர்களது நிர்வாகத்தினை அப்பகுதிகளில் மேற்கொண்டனர். மேலும் முன்னர் பிரித்தானியாவின் இந்தியா(/1)வின் கீழ் இருந்த பிரதேசங்கள் மற்றும் மன்னராட்சி நடைபெற்ற மாநிலங்களில் சில பகுதிகளுக்கு இடையில் சிற்சில வேறுபாடுகள் இருந்தன.
அதே சமயத்தில் அரசியல் செயல்திறம் மற்றும் இராணுவம் ஆகியவற்றின் மூலம் இந்திய அரசாங்கம் நடைமுறைக்கேற்றவாறு மற்றும் சட்டப்படி மீதமுள்ள கூட்டாட்சிப் பிரதேசங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி அவற்றையும் இந்தியாவுடன் இணைத்தது.
இந்த செயல்பாட்டின் மூலமாக மன்னராட்சி நடைபெற்ற பெரும்பாலான பகுதிகளை வெற்றிகரமாக இந்தியாவுடன் ஒருங்கிணைத்த போதும் சில மாநிலங்களில் இதனை வெற்றிகரமாக நிகழ்த்த இயலவில்லை. இதில் குறிப்பிடத்தக்கவை காஷ்மீர் மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மன்னராட்சிப் பகுதிகள் ஆகும். இதில் காஷ்மீரின் இணைப்பு காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பூசல் உருவாகியது. ஐதராபாத்தில் அப்பகுதியை ஆண்ட மன்னர் சுதந்திரமாக நீடிக்க முடிவு செய்தார். மேலும் திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பிரிவினைவாத இயக்கங்கள் உருவாகின.
ALSO




![Contract I Solved Problems (Tamil) [ஒப்பந்தம் நான் பிரச்சனைகளை தீர்த்தேன் (தமிழ்)]](https://karthicklawagency.com/wp-content/uploads/2023/07/solve-proplem-300x300.png)
Reviews
There are no reviews yet.