BUY தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 | W.E.F. 13.4.2023| ATC TAMILBOOK | BEST BOOK FOR TAMIL |
- ஒருங்கிணைந்த சட்டம்: அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) ஒரு பொதுவான சட்டமாக இது உள்ளது.
- நிறுத்தம் மற்றும் புதுப்பித்தல்: சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது, ஆனால் 2023-ல் புதுப்பிப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
- திருத்தங்கள்: தேர்தல் விதிகள் (அதிகாரிகள், வேட்பாளர்கள்), பொது சுகாதாரம் (கழிவு மேலாண்மை), மற்றும் நிர்வாக அதிகாரங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
- பழைய சட்டங்களின் நீக்கம்: இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920 போன்ற சட்டங்கள் நீக்கப்படும்.
- தேர்தல் விதிகள்: அரசியல் கூட்டங்கள், தேர்தல் நடத்தை விதிகள், வாக்குப்பதிவு நிலையங்களில் பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் தொடர்பான குற்றங்கள் மற்றும் அபராதங்கள்
- பொது சுகாதாரம்: உடல்/சடலங்களை அகற்றுதல், குப்பை மேலாண்மை, கழிவுநீர் அகற்றுதல், மற்றும் திடக் கழிவு மேலாண்மையில் நவீன முறைகள்.
- அதிகாரிகளின் கடமைகள்: நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் அதிகாரங்கள், பொது ஊழியர்களாக அவர்கள் கருதப்படுவது.
- நிதி மற்றும் நிர்வாகம்: கடன்களை வசூலிப்பதற்கான காலக்கெடு, சொத்துக்களுக்கு இழப்பீடு, மற்றும் நகராட்சி சொத்துக்களை அகற்றுவதைத் தடை செய்தல்.
- 2023-ல், 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டை நவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV-இல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள், பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் – 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு கொண்ட பஞ்சாயத்து ராஜ் என்ற ஊராட்சி முறை அறிமுகமானது. இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது. தமிழ்நாடு முனிசிபல் சட்டங்கள் (திருத்த) சட்டம், 2016 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (திருத்த) சட்டம், 2016 ஆகியவற்றை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக தமிழ்நாடு அரசு உயர்த்தியது.[1][2]
தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சிகள் என்றும் ஊரக உள்ளாட்சிகள் என்ற தலைப்பில், ஆறு முக்கிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
-
மாவட்ட ஊராட்சிகள்
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சிக் குழுக்கள் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை என்கிற அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.
மாவட்டத்தில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் (ஊராட்சி ஒன்றியங்கள்) கொண்டு மாவட்ட ஊராட்சிக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன.
இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாவட்ட ஊராட்
சி மன்றத் தலைவராகவும், ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார்.
மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரி ஆகியோர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்ட ஊராட்சிகள் இருக்கின்றன.[4]
பேரூராட்சிகள்
இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர்.
இந்த பேரூராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பேரூராட்சி செயல் அலுவலர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பேரூராட்சி மன்ற தலைவர் 20.11.2019 வரை மக்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வந்தார்.
அதன்பின் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின்படி பேரூராட்சி மன்றத் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மூலம் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை வந்தது.
அதன்படி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தான், பேரூராட்சி மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இவருக்கு அடுத்தபடியாக பேரூராட்சி மன்றத் துணைத் தலைவரும் வார்டு உறுப்பினர்கள் மூலமே தேர்வு செய்யப்படுகின்றார்.
பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலக ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 561 பேரூராட்சிகள் இருக்கின்றன.
இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் பேருராட்சிகளுக்கான ஆணையர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.





Reviews
There are no reviews yet.