BUY உரிமையியல் நடைமுறைச்சட்டம்
இத்துடன் “வணிக நீதிமன்றங்கள் சட்டம்” என்ற நூலையும், மேலும் “வணிக நீதிமன்றங்கள் (திருத்த) சட்டம்” என்ற இணைப்பு நூலையும் சேர்த்து இரண்டு நூல்களை தனியாக கேட்டு வாங்கிக் கொள்ளவும்.
Civil Procedure Code
- With Limitation Act
உரிமையியல் நடைமுறை சட்டம் –
- 1. அறிமுகம்
- 2. உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பு
- 3. உரிமையியல் தன்மை கொண்ட வழக்குகள்
- 4. வழக்கை நிறுத்தி வைத்தல் (ரெஸ் சப்ஜூடைஸ்)
- 5. முன்தீர்ப்பு தடைக் கோட்பாடு (ரெஸ்ஜூடிகேட்டா)
- 6. அயல்நாட்டு தீர்ப்பு
- 7. வழக்கு தொடர வேண்டிய இடம்
- 8. வழக்கினை நிறுவுதல்
- 9. தரப்பினர்களை மற்றும் வழக்கிற்கான காரணங்களை கூட்டுவது
- 10. பிரதிநிதித்துவ வழக்கு
- 11. வாதுரை
- 12. வழக்குரை (பிளைண்ட்)
- 13. எதிர் வழக்குரை (ரிட்டன் ஸ்டேட்மென்ட்)
- 14. அழைப்பாணை
- 15. எதிரிடை வாதமும் எதிர் பாத்தியமும்
- 16. வாதுரையின் திருத்தம்
- 17. வழக்கெழு வினா
- 18. உரிமையியல் வழக்கொன்றின் பல்வேறு படிநிலைகள்
- 19. ஒருதலைப்பட்ச தீர்ப்பாணை
- 20. சில பதங்களுக்கான வரையறைகள்
- 21. ஆணையர் (கமிசனர்)
- 22. உடைமைக்காப்பாளர் (ரிஸிவர்)
- 23. தீர்ப்புக்கு முன் கைது செய்தல்
- 24. தீர்ப்புக்கு முன் ஜப்தி செய்தல்
- 25. தற்காலிக உறுத்துக்கட்டளை (டெம்பராரி இஞ்சங்க்சன்)
- 26. அரசு மற்றும் பொது அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகள்
- 27. கூட்டு நிறுவனங்களின் சார்பாகவும் எதிராகவும் தொடுக்கப்படும் வழக்குகள்
- 28. இளவர் மற்றும் பித்து நிலையரின் சார்பாகவும் எதிராகவும் தொடுக்கப்படும் வழக்குகள்
- 29. ஏழ்மை நிலையர் தொடுக்கும் வழக்குகள்
- 30. இடைப்பாத்திய வழக்குகள்
- 31. சுருக்க நடைமுறை (சம்மரி டிரையல்)
- 32. மேல்முறையீடு
- 33. முதல் மேல்முறையீடு
- 34. இரண்டாம் மேல்முறையீடு
- 35. உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு
- 36. மேற்கோள் விசாரணை
- 37. மறுஆய்வு
- 38. சீராய்வு
- 39. நிறைவேற்றுதல்
- 40. மீட்டளிப்பு
- 41. ஆணையுறுதியாவணம்
- 42. வழக்குகளை மாற்றுதல்
- 43. முன்னெச்சரிப்பு மனு
- 44. நீதிமன்றத்தின் உள்ளார்ந்த அதிகாரம்.
இவற்றுடன் காலவரையறை சட்டமும் சேர்ந்து.
BUY உரிமையியல் நடைமுறைச்சட்டம் | காலவரையறை சட்டத்துடன் | Civil Procedure Code in Tamil | With Limitation Act | 13-ஆம் பதிப்பு | Latest Edition| P R JEYARAJAN GUIDE | SRI PATHI RAJAN PUBLICATION | BEST TAMIL GUIDE |
பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform civil code) என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது. உலகில் பெரும்பான்மை நாடுகளில் அனைத்து சமயத்திற்கான பொது உரிமையில் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில நாடுகளில், குறிப்பாக இசுலாமியப் பெரும்பாண்மை கொண்ட நாடுகளான சௌதி அரேபியா, ஏமன், இரான், ஜோர்டான், சிரியா, லெபனான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களில், ஷரியத் சட்டம் முழுமையாக நடைமுறையில் உள்ளது. சில நாடுகளில் இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மட்டுமே ஷரியத் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இசுலாமியர்களுக்கான உரிமையியல் சட்டத்தைப் பொருத்தவரை, ஷரியத் சட்டமே மூலமாக அமைந்துள்ளது.
பொது சிவில் சட்டத்தை முதன்முதலில் உத்தராகண்டம் மாநில அரசு சனவரி 2025ல் நடைமுறைப்படுத்தியது. [1]
இந்திய அரசியலமைப்பில் பொது சிவில் சட்டம்
இந்திய அரசியலமைப்பின் பகுதி 4 மற்றும் பிரிவு 44ல் அனைத்து இந்திய சமயங்கள் மற்றும் சமூகங்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துகிறது.[2] இந்திய அரசியலமைப்பின் பிரிவு 44, “இந்தியாவின் எல்லை முழுவதும் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைப் பாதுகாக்க அரசு முயற்சிக்கும்.” என்று கூறுகிறது.
இந்தியாவில் பொது சிவில் சட்டம்
இந்தியாவில் கோவா மட்டுமே பொது உரிமையியல் சட்டத்தை பின்பற்றி வருகிறது.[3] சமய சார்பற்ற நாடான இந்தியாவில், வாழும் பல்வேறு சமய மக்களுக்கான தனிநபர் சட்டத்தினை (Personal Law) நீக்கி, அதற்கு பதிலாக நாட்டின் அனைத்து தரப்பு சமய மக்கள் கடைப்பிடிக்க வசதியாக பொது உரிமையியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த, 1949 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 44-இல் பரிந்துரை செய்தது.[4] ஆனால் இது வரை இந்திய அரசு பொது உரிமையியல் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தவில்லை.[5] உச்ச நீதிமன்றமும் பொது உரிமையியல் சட்டத்தினை இயற்ற இந்திய அரசுக்கு கருத்து தெரிவித்துள்ளது. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை வரவேற்றார்.[6][7][8][9] ஆனால் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவர இசுலாமியர்கள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.[10]
பொது சிவில் சட்டத்தின் நோக்கம்
- இந்து தனிநபர் சட்டப்படி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள மாநிலம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில், இந்து சமய மகளிர்க்கு சொத்து மற்றும் பரம்பரை சொத்துகளில் உரிமையில்லை. எனவே இந்த ஆண் – பெண்களுக்கிடையே உள்ள சொத்து உரிமையில் ஏற்றத் தாழ்வை நீக்க பொது சிவில் சட்டத்தால் மட்டுமே இயலும்.
- முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, முஸ்லீம் அல்லாத கணவன் இரண்டாம் திருமனம் செய்து கொண்டால், அச்செயலை குற்றமாக கருதி இந்திய தண்டனைச் சட்டம் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. அதே செயலை ஒரு இசுலாமிய ஆண் செய்தால் இந்திய தண்டனைச் சட்டம் குற்றமாக கருதுவதில்லை.
- சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் இசுலாமியர் அல்லாத ஒரு ஆண் அல்லது பெண், இசுலாம் சமயத்தில் சேர்ந்து பின் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதை தடுத்து நிறுத்திட இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமில்லை.
- முஸ்லீம் திருமண முறிவு மற்றும் ஜீவனாம்சம் பொருத்தவரை, இசுலாம் தனிநபர் சட்டமான ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால் இசுலாமியப் பெண்களுக்கு, பிற சமய பெண்கள் அளவிற்கு சமூக[சான்று தேவை], பொருளாதார அளவில் பாதுகாப்பு கிடைப்பதில்லை.[11]
- திருமணம், திருமண முறிவு, ஜீவனாம்சம், வாரிசுரிமை, சொத்து மற்றும் பரம்பரைச் சொத்தைப் பங்கீடு செய்தல், குழந்தைகளை தத்து எடுத்தல் போன்றவற்றில் சமயம் சார்ந்த தனி நபர் சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. எடுத்துக்காட்டாக இசுலாமியர்களுக்கு திருமணம், திருமண முறிவு, ஜீவனாம்சம், சொத்துரிமை போன்றவைகளில் மட்டுமே, ஷரியத் சட்டத்தின் படி தீர்மானிக்கப்படுகிறது.
ALSO
BUY இந்திய ஒப்பந்தச் சட்டம் I (பொதுக் கோட்பாடுகள்) | Indian Contract Act – I (General Principles) in TAMIL | As per Amended Acts |




Reviews
There are no reviews yet.